சினேக பூர்வ போட்டியில் மியன்டாட் விளையாட்டுக் கழகம் வெற்றி

கடினபந்து கிரிக்கெட்

சாய்ந்தமருது மியன்டாட் விளையாட்டுக் கழகத்திற்கும் சாய்ந்தமருது நியு ஸ்டார் விளையாட்டுக் கழகத்திற்கும் இடையில் நடைபெற்ற சினேக பூர்வ கடினபந்து கிரிக்கெட் போட்டியில் மியன்டாட் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டிக்கொண்டது.

இப்போட்டி சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த-04 இடம்பெற்றது.

20 ஓவர்கள் கொண்ட இப் போட்டியில் ஆரம்பத்தில் துடுப்பாடிய நியு ஸ்டார் விளையாட்டுக் கழகம் சகல விக்கெட்டுகளையும் இழந்து 135 ஒட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பாடிய மியன்டாட் விளையாட்டுக் கழகம் 15வது ஓவர் 3 வது பந்தில் 139 ஓட்டங்களைப் பெற்று 02 விக்கெட்டுக்களால் வெற்றியடைந்தது.

போட்டியின் சிறப்பாட்டக்காறராக மியாண்டாட் அணியின் ஏ.எச். எம்.முர்சித் தெரிவானார்.

இப்போட்டிக்கு பிரதம அதிதிகளாக நியு ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.எம். மஃரூப் அவர்களும் மற்றும் மியன்டாட் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ. பாயிஸ், பிரதி தலைவர் ஏ.எல்.எம். றிஸ்வி, அமைப்பாளர் கே.எம். பயான், முகாமையாளர் யூ.எல். பரீட் ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள்.

 

கல்முனை மத்திய தினகரன் நிருபர்

Fri, 09/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை