10 குழந்தைகள் கொலை: 65 சூனியக்காரர்கள் கைது

பத்து குழந்தைகளை நரபலி கொடுத்தது தொடர்பாக 65 சூனியக்காரர்கள் அல்லது பாரம்பரிய மருத்துவர்களை தான்சானியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குழந்தைகள் ஜனவரி மாதம் கொல்லப்பட்டு, அவர்களின் உடல் பாகங்கள் நீக்கப்பட்டு உள்ளன. சமய சடங்குகளில் உடல் பாகங்களை பயன்படுத்துவது வளத்தை கொண்டு வருமென்பது தான்சானிய மக்களின் நம்பிக்கையாகும். தான்சானிய உயர் பொலிஸ் அதிகாரி பாரம்பரிய மருத்துவர்கள் உரிய உரிமம் பெற்று இருக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.

Wed, 03/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை