களுத்துறை கழகம் வெற்றி

வெள்ளவத்தை யங் சில்வர் கால்பந்தாட்ட கழகத்துக்கும், களுத்துறை கால்பந்தாட்ட கழகத்துக்குமிடையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான சிநேகபூர்வமான கால்பந்தாட்ட போட்டியில் களுத்துறை கால்பந்தாட்ட கழகம் 01 : 00 கோலினால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டி வெள்ளிக்கிழமை (13) மாலை வெள்ளவத்தை குரே பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்படவுள்ள 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான சிட்டி லீக் தொடரில் பங்கேற்கும் பொருட்டு ஒத்திகை ஆட்டத்துக்காகவே இவ்விரு அணிகளும் இந்த சிநேகபூர்வ ஆட்டத்தில் பங்கேற்றன.

இடைவேளைக்கு முன்னதாக இரு அணிகளும் எவ்வித கோல்களையும் போடவில்லை. எனினும் இடைவேளைக்கு பின்னர் களுத்துறை கால்பந்தாட்ட கழக வீரர் எம். உஸ்மான் 69 வது நிமிடத்தில் தனது அணிக்கான வெற்றி கோலினை செலுத்தியதால் அவ் அணி ஒரு கோலினால் வெற்றி ஈட்டியது.

போட்டிக்கு நடுவர்களாக புத்தளம் ஓடிடாஸ் கழகத்தின் ஸ்தாபகரும், கால்பந்தாட்ட பயிற்றுவிப்பாளருமான எம்.ஏ.செய்யது ரிபாய், எம்.சிபார், எம்.இஃபாம் ஆகியோர் கடமையாற்றினர்.

 புத்தளம் தினகரன் நிருபர்

Tue, 12/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை