மிகப்பெரிய சட்டகத்தை உருவாக்கி துபாய் சாதனை

உலகின் மிகப்பெரிய சட்டகத்தை உருவாக்கி துபாய் சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

துபாயின் ஜபீல் பூங்கா அருகே செவ்வக வடிவிலான பிரமாண்ட புகைப்பட சட்டகம் போன்று ‘துபாய் பிரேம்’ என்ற கட்டு மானம் உள்ளது.

25 கோடி திர்ஹம் செலவில் 492 அடி உயரமும், 305 அடி அகலமும் கொண்டதாக அது உருவாக்கப்பட்டது.

தொலைவில் இருந்து பார்த்தால் ஒரு புகைப்பட சட்டகத்திற்குள் துபாய் நகரம் உள்ளதுபோன்று தெரியும் வகையில், இந்த கட்டுமானம் வடிவமைக்கப்பட்டது.

தங்கநிற உலோக தகடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள கட்டுமானம், நடைமேடை, ‘லிப்ட்’ வசதியும் கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி திறக்கப்பட்ட துபாய் பிரேமை உலகின் மிகப்பெரிய சட்டகமாக கின்னஸ் சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

Mon, 05/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை