சந்திரகாந்தன் வேட்பு மனுவில் கையொப்பம்

பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி படகு சின்னத்தில் களமிறங்கவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ. பிரசாந்தன் தெரிவித்தார். 

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமை வேட்பாளராக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) போட்டியிடவுள்ளார்.

சிறைச்சாலையில் விளக்கமறியலிலுள்ள அவர்,  நேற்று வேட்பு மனுவில் கையொப்பமிட்டார். இதற்கான அனுமதியை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

சிறைச்சாலையில் சிவநேசதுரை சந்திரகாந்தனின் பெற்றோர், கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் கட்சியின் முக்கிஸ்தர்கள் முன்னிலையில் அவர் கையெழுத்திட்டார். 

மட்டக்களப்பு மாவட்டத்தை நேசிப்போரையும் அதனோடிணைந்த சமூக அமைப்புகள்,கட்சிகளை ஒருங்கிணைத்த வகையில் கிழக்கு மக்களின் பாரிய சுமைகளை தமது கட்சி சுமந்துள்ளதாக இங்கு கருத்து தெரிவித்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.  எதிர்வரும் புதன்கிழமை(18) நண்பகல் 12.40 மணியளவில் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வெல்லாவெளி தினகரன், புதிய காத்தான்குடி நிருபர்கள் 

Tue, 03/17/2020 - 10:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை