கலாவெவ, விஜிதபுரவைச் சேர்ந்த 40 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (26) பிற்பகல் 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவர் இரும்பு மற்றும் அலுமினிய தகடு பொருத்தும் வெல்டின் வேலை செய்து வருபவராகும். நேற்றையதினம் வீடொன்றில் ஆறு அடி உயரத்தில் மேலிருந்து வெல்டின் வேலை செய்து கொண்டிருக்கும் போது மின்னொழுக்கு காரணமாக மின்சாரம் தாக்கி கீழே வீழ்ந்துள்ளார்.
இச்சந்தர்ப்பத்தில் தலையின் பின்பகுதி தாக்கப்பட்டு காயம் ஏற்பட்டு இவர் மரணமடைந்துள்ளார்.
இவ்வாறு மரணமடைந்தவர் மொஹமட் ரூமி எனும் 3 சிறுவயது பிள்ளைகளின் தந்தை ஒருவராகும்.
(கல்நேவ தினகரன் விசேட, அனுராதபுரம் மேற்கு மேலதிக தினகரன் நிருபர்கள்)
Sun, 10/27/2019 - 13:06
from tkn