வடக்கு, மத்திய, ஊவா, மேல் மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் மழை

- சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை

இன்றையதினம் (25) நாட்டின் மேல் , சப்ரகமுவ, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி , நுவரெலியா, மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிக ஓரளவு பலத்த மழை பெய்யலாம்.

கிழக்கு மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Sat, 03/25/2023 - 07:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை