வீசாக்கள் விற்பனை செய்ய இடமளிக்கப்படமாட்டாது

அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அறிவிப்பு

புனித மக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்காக வழங்கப்படும் விசாக்கள் கடந்த வருடங்களைப் போன்று விற்பனை செய்ய இடமளிக்கப்படமாட்டாதென்று, புத்தசாசன கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார். இதற்கு முரணாக யாரேனும் செயற்படுவார்களாயின் உடனடியாக அமைச்சுக்கு அறிவிக்குமாறும், அவர் கேட்டுக்கொண்டார்.

கொழும்பிலுள்ள முஸ்லிம் சமய விவகாரத் திணைக்களத்தில் முதன்முறையாக ஹஜ் விடயங்களை கவனிப்பதற்காக தனியானதொரு ஹஜ் விவகார அலுவலகமொன்று, புத்தசாசன கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவித்த போது, "கடந்த காலங்களில் இலங்கைக்கு கிடைக்கும் விசாக்கள் பல இலட்சங்களுக்கு விற்பனை செய்யப்பட்டன.

அவ்வாறான மோசடிகளை தடுப்பதற்காகவே இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஹஜ் யாத்திரைக்காக செல்லும் முஸ்லிம்களுக்கு நியாயமான சேவைகளை வழங்குவதே தனது நோக்கம். இம்முறை இலங்கை முஸ்லிம்களுக்காக 3,500 விசாக்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்" என்றார்.

 

Sat, 03/25/2023 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை