அமெரிக்க பனிப்புயல்; பலி 61 ஆக அதிகரிப்பு

அமெரிக்காவின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருக்கும் பனிப்புயலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.

இதில் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கு நியூயோர்க்கில் மேலும் இருவர் உயிரிழந்த நிலையில் அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 39 ஆக உயிர்ந்துள்ளது. இதில் 17 பேர் வெளியில் இருந்த நிலையில் உயிரிழந்திருப்பதோடு 11 பேர் வீடுகளிலும் நால்வர் கார்களுக்குள் இருந்த நிலையிலும் உயிரிழந்துள்ளனர்.

இந்தப் பனிப்புயலுடன் தொடர்புபட்ட கார் விபத்துகளில் ஒஹியோ மாநிலத்தில் ஒன்பது உயிழப்புகள் பதிவாகியுள்ளன. அமெரிக்காவில் பாதிக்கும் அதிகமான மாநிலங்களில் பனிப்புயல் மற்றும் கடும் குளிர் தொடர்பில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் நியூயோர்க்கில் வெப்பம் உயர்ந்து பனி உருகி வரும் நிலையில் வெள்ளம் ஏற்படும் அபாயம் பற்றியும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Sat, 12/31/2022 - 12:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை