இலங்கையர் ஏழு பேரும் நலமாக உள்ளதாக அறிவிப்பு

துருக்கியிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவிப்பு

 

உக்ரேய்ன் படையினரால் மீட்கப்பட்ட இலங்கையர் 07 பேரும் மிகவும் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாக துருக்கி தூதரக வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

துருக்கியிலுள்ள இலங்கைத் தூதரக  அதிகாரிகள் நேற்று முன்தினம் கிவ் நகரில் அவர்களைச் சந்தித்து நிலைமைகளை ஆராய்ந்த பின்னரே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக துருக்கியிலுள்ள இலங்கை தூதரக அதிகாரி ஒருவர் தெரிவிக்கும்போது, இந்த 07 பேரும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம். எமது தூதர் நேற்று முன்தினம் அவர்களைச் சென்று பார்வையிட்டு அவர்களின் தேவைகள் அனைத்தையும் வழங்கினார். அவர்கள் நலமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளதாக தெரிவித்துள்ளாரென்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் வெளிநாடொன்றுக்கு செல்லும் நோக்கில் ஒவ்வொருவரும்

பல மில்லியன் ரூாபாய்கள் செலுத்தியே அங்கு சென்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்ததாக அந்த உயரதிகாரி மேலும் தெரிவித்தார்.

Thu, 09/22/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை