நுரைச்சோலை இயந்திர பழுதின் எதிரொலி மின் துண்டிப்பு நேரத்தை மேலும் அதிகரிக்க வாய்ப்பு

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி இயந்திரமொன்று செயலிழந்துள்ளதால் மின்தடை அமுலாகும் காலப்பகுதியை நீடிக்க வேண்டுமென இலங்கை மின்சார

சபை பொறியிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கு மின்தடை அமுல்படுத்தப்படுகின்ற நிலையில் , மின்தடை அமுலாகும் காலப்பகுதியினை 5 மணித்தியாலங்களுக்கு நீடிக்க வேண்டியுள்ளதாகவும் மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் நேற்று மூன்று மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Fri, 05/06/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை