மியன்மார் கடலில் படகு மூழ்கி 17 அகதிகள் பலி

மியன்மார் கடற்பகுதியில் மோசமான காலநிலை காரணமாக ரொஹிங்கிய அகதிகள் படகு ஒன்று மூழ்கியதில் சிறுவர்கள் உட்பட குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

வங்காள விரிகுடா வழியாக மலேஷியாவுக்கு செல்ல முயன்ற இந்தப் படகில் குறைந்தது 90 பேர் இருந்துள்ளனர். சில சடலங்கள் மேற்கு மாநிலமான ரகினே, கடற்கரைகளில் ஒதுங்கி இருப்பதோடு தொடர்ந்து 50க்கும் அதிகமானவர்கள் காணாமல்போயுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 12 பெண்கள் மற்றும் இரு சிறுவர்கள் இருப்பதாக ரொஹிங்கிய ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்ற கடுமையான இராணுவ நடவடிக்கையை அடுத்து முஸ்லிம் சிறுபான்மையினரான ரொஹிங்கியாக்களில் பெரும்பாலானவர்கள் அண்டை நாடான பங்களாதேஷுக்கு தப்பிச் சென்றபோதும் சிலர் தொடர்ந்து மியன்மாரிலேயே தங்கியுள்ளனர். கடந்த மே 19 ஆம் திகதி இந்தப் படகு புறப்பட்ட நிலையில் சில நாட்களில் அது மோசமான காலநிலையில் சிக்கியுள்ளது.

Wed, 05/25/2022 - 07:34


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை