மல்வத்து, அஸ்கிரிய மகா நாயக்கர்கள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்களைக் கொண்ட பல தரப்பு மாநாட்டை கூட்டி, நிலையான அபிவிருத்திக்காக திட்டமொன்றை வகுப்பதன் முக்கியத்துவம் மற்றும் ஏனைய 13 விடயங்களை  உள்ளடக்கி, மல்வத்து அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் வண. திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வண.வரகாகொட ஞானரதன தேரர் ஆகியோரின் கையொப்பத்துடன் இந்தக் கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேசிய கொள்கையை வகுப்பதன் அவசியம் அந்தக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்நியச் செலாவணி நெருக்கடியைத் தணிக்க அடையாளம் காணப்பட்ட முன்னுரிமைகளின் பட்டியலின்படி, அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் மற்றும் உள்நாட்டுப் பொருளாதார மாதிரியை உருவாக்குதலும் பரிந்துரைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உற்பத்திக்காக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குதல், பொருளாதார நெருக்கடி காலத்தில்,அத்தியவசியப் பொருட்களுக்கு

பற்றாக்குறையை ஏற்படுத்துவோருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பற்றியும் மகாநாயக்க தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முதலீட்டை ஊக்குவித்தல், வெளிப்படையான பொருளாதாரம், வெளிநாட்டுப் பணப் பரிமாற்றத்தை அதிகரித்தல், ஏற்றுமதிப் பொருளாதாரத்தை கட்டியெழுப்பல் உள்ளிட்ட விடயங்களும் கடிதத்தில்

குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் புதிய முதலீடுகளை ஊக்குவித்தல், அரச கடனை மறுசீரமைத்தல், குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு நிவாரணம் வழங்குதல், வீண்விரயம், ஊழல் மற்றும் வள துஷ்பிரயோகம் ஆகியவற்றைத் தடுக்கவும் ஆலோசனை முன்மொழியப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்காக நடைமுறைப்படுத்திய தூரநோக்குடைய வேலைத்திட்டங்கள் தொடர்பில் முழு நாட்டு மக்களினதும் பாராட்டு மற்றும் மகிழ்ச்சி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைக்கும் என்று மகாநாயக்க தேரர்கள் இக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

 

Wed, 03/23/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை