உயர் தரப் பரீட்சைக்கு இடையூறு ஏற்படுத்திய சுதந்திர கட்சியின் மாநாடு

உயர் தரப் பரீட்சைக்கு இடையூறு ஏற்படுத்திய சுதந்திர கட்சியின் மாநாடு-SLFP Vanni Conference GCE AL Exam Disturbance

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் வன்னி மாநாட்டால் சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற உயர் தரப்பரீட்சைக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது .

நகர சபையினருக்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டையடுத்து கட்சியின் மாநாட்டை ஏற்பாடு செய்தவர்களுக்கு  ஒலி பெருக்கியின் சத்தங்களை குறைத்து மாணவர்களின் பரீட்சைக்கு இடையூறின்றி கட்சியின் மாநாட்டை நடாத்துமாறு அறிவித்தல் வழங்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

உயர் தரப் பரீட்சைக்கு இடையூறு ஏற்படுத்திய சுதந்திர கட்சியின் மாநாடு-SLFP Vanni Conference GCE AL Exam Disturbance

நேற்று (19)  காலை 9.30 மணிக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் வன்னி மாநாடு வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில்  ஆரம்பிக்க நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளது. எனினும் மண்டபத்தில் ஒலி பெருக்கியின் அதிக சத்தத்தினால் அருகிலுள்ள வைசப்பிரகாசா மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உயர் தரப் பரீட்சைக்கு இடையூறு ஏற்படுத்திய சுதந்திர கட்சியின் மாநாடு-SLFP Vanni Conference GCE AL Exam Disturbance

இதையடுத்து குறித்த கட்சியின் மாநாட்டை ஏற்பாடு செய்தவர்களிடம் பாடசாலையில் உயர்தர மாணவர்கள் பரீட்சை இடம்பெற்று வருகின்றது எனவே ஒலி பெருக்கியின் சத்தங்களை குறைத்துக்கொண்டு மாநாட்டை நடாத்துமாறு  நகரசபையினரால் அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது.

உயர் தரப் பரீட்சைக்கு இடையூறு ஏற்படுத்திய சுதந்திர கட்சியின் மாநாடு-SLFP Vanni Conference GCE AL Exam Disturbance

ஒரு சில மணித்தியாலயத்தின் பின்னர் கட்சியின் மாநாடு முற்பகல் 11.00 மணியளவில் ஆரம்பமாகியது .

குறித்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, தயாசிறி ஜயசேகர, துமிந்த திஸாநாயக்க, முன்னாள் மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்கா, பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் மற்றும் நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஓமந்தை விஷேட நிருபர்

Sun, 02/20/2022 - 10:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை