நாடு திரும்பியதும் சாத்தியம் என்கிறார் GL
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தயாராகி வருகிறார் என்று இராஜதந்திர வட்டாரங்களிடம் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கிளாஸ்கோ நகரில் நடக்கும் காலநிலை மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியதும் இந்தப் பேச்சு நடவடிக்கைகள் இடம்பெறும் என்றும் வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார். இந்தப் பேச்சு தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகரிடமும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பேச்சு குறித்து அண்மையில் சந்தித்த உயர்ஸ்தானிகர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரிடம் வினவியபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அவ்வாறு ஓர் அழைப்பு இதுவரை கிடைக்கவில்லை என்று கூறியிருந்தார்.
from tkn