அத்தியாவசிய தேவை உள்ளவர்களுக்கு மட்டுமே மாகாணங்களுக்கிடையில் பயணிக்க அனுமதி

பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், அத்தியாவசிய காரணங்கள் அல்லாமல் வேறு காரணங்களுக்காக மாகாண எல்லைகளை கடக்கும் நபர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கடந்த சில தினங்களாக மாகாண எல்லையை கடந்து செல்ல முற்பட்ட பலர் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து அரச பணியாளர்களுக்கு மாத்திரமே திறக்கப்பட்டுள்ளது. அத்துடன் நெருங்கிய உறவினர்களின் மரணச் சடங்குகளில் கலந்து கொள்வதற்காக செல்பவர்களும் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

Thu, 08/05/2021 - 08:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை