உண்மைகளை மறைக்க அனுமதிக்கக்கூடாது - சோபித தேரர்

சிறுமி ஹிசாலினியின் மரணம் தொடர்பான உண்மைகளை மறைக்க அனுமதிக்கக்கூடாதென சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சோபித தேரர் மேலும் தெரிவித்துள்ளதாவது,.. இத்தகைய சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் உடனடியாக பாராளுமன்றத்திலிருந்தும் வெளியேற்றப்பட வேண்டும். இதேபோன்ற சம்பவங்கள் தொடர்பாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு ஆணைக்குழு, பொலிஸார் மற்றும் அதிகாரிகள் விழிப்புடன் செயற்பட வேண்டும். சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்பவர்கள், கொலைகாரர்கள் மற்றும் திருடர்கள் போன்ற குற்றவாளிகள் பாராளுமன்றத்தை தங்கள் அதிகார இடமாக மாற்றியுள்ளனர். அத்தோடு ரிஷாட் பதியுதீன் போன்றவர்களுக்காக பாராளுமன்றத்திலுள்ள அனைவரும் வெட்கப்பட வேண்டும். இதேவேளை ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய சிறுமியின் மரணத்தை மறைக்க சதித்திட்டம் இடம்பெறுவதாக சிங்ஹலே அமைப்பின் மெடில்லே பஞ்சாலோக்க தேரர் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் மரணம் தொடர்பான முதல் பிரேத பரிசோதனையில் வசீம் தாஜுதீனின் பிரேத பரிசோதனைக்கு விசுவாசமாக இருந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Sat, 07/31/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை