சிவப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தல்

 

மட்டக்களப்பு பிராந்தியத்தில் மட்டக்களப்பு, கோறளைப்பற்று மத்தி, ஏறாவூர், காத்தான்குடி ஆகிய பகுதிகள் தொடர்ந்து சிவப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,..

கடந்த 24 மணி நேரத்தில் மட்டக்களப்பில் 58 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் இதுவரை 8,525 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் மட்டக்களப்பில் இதுவரை 2,78,000 தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் 106,000 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

மட்டக்களப்பு விசேட நிருபர்

Sat, 07/31/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை