இலங்கை மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை
நாடு கொரோனா வைரஸின் நான்காவது அலையை நெருங்கிக் கொண்டிருப்பதாக இலங்கை மருத்துவர் சங்கம் எச்சரித்துள்ளது.
நாட்டில் பயணத் தடை நடைமுறையில் உள்ள போதும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடக்கூடிய அளவில் குறைவடைய வில்லை என மருத்துவர் சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் திருமதி பத்மா குணரட்ன தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
மே 20 ஆம் திகதியிலிருந்து பயணத்தடை நடைமுறைப்படுத்தப்பட்டது. அப்போது நாம் எதிர்பார்த்த வகையில் கட்டுப்படுத்தக் கூடிய நிலையில் வைரஸ் தொற்று நோயாளிகள் எண்ணிக்கை குறைவடைந்து காணப்பட்டது. எனினும் நாம் எதிர்பார்த்த அளவு நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது பாரிய அளவில் குறையவில்லை. பயணத் தடைகளில் காணப்பட்ட சிறு தளர்வுகள் இந்த நிலைக்கு காரணமாகியுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் எமது ஆஸ்பத்திரி கட்டமைப்பின் மூலம் எமக்கு கிடைக்கும் தகவல்களின்படி கொரோனா வைரஸ் தொற்றின் நானகாவது அலையின் ஆரம்ப நிலையை நெருங்கிக் கொண்டிருப்பதாக குறிப்பிட முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம்
from tkn