வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் உதவி

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) முஹம்மதுசாத்கட்டாக் கடந்த சனிக்கிழமை (12) பேருவளை பிரதேசத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு,முன்பள்ளிகள் உட்கட்டமைப்பு மற்றும் கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த டிசில்வா முன்னிலையில் பாகிஸ்தான் அரசாங்கத்தின் சார்பாக இப்பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப்பொருட்களை விநியோகித்தார்.

காலி பிரதேசத்திற்கும் விஜயம் மேற்கொண்ட உயர்ஸ்தானிகர் காலி பிராந்தியத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உணவுப் பொருட்களை விநியோகித்தார். இவ்விஜயத்தின்போது கரிம மற்றும் இயற்கை உரங்கள் உற்பத்தி வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சர் பிரியதர்ஷன டிசில்வாவும் கலந்து கொண்டார்.

Tue, 06/15/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை