ஒன்லைன் மூலம் மதுபான விற்பனை: சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை

கலால் திணைக்கள பிரதி ஆணையாளர்

சுப்பர் மார்க்கெட்டுகளில் ஒன்லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இணையத்தளங்கள் மூலம் பரப்பப்படும் செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்படி தகவலை முற்றாக நிராகரித்துள்ள கலால் திணைக்கள பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க ஒன்லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்வதற்கு எத்தகைய அனுமதியும் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். இணையத்தளங்கள் சில அது தொடர்பில் செய்தி வெளியிடுகையில் ஒன்லைன் முறைமூலம் சூப்பர் மார்க்கெட்டுகளிலிருந்து மதுபானம் கொள்வனவு செய்ய முடியுமென செய்திகளை வெளியிட்டிருந்தன.

இந்த செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என தெரிவித்துள்ள அவர், சில சூப்பர் மார்க்கெட்டுகள் அதற்கான அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில் அதற்கான அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 06/15/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை