ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி நேற்று முதல் வழங்கல்

ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் சன்ன பங்கேற்பு

ரஷ்யாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஸ்புட்னிக் வி தடுப்பூசியை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க நோயாளர்கள் அதிகமாக இனங்காணப்பட்டுள்ள கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவை மற்றும் கொத்தட்டுவ பகுதி மக்களுக்கு நேற்றைய தினம் தடுப்பு ஊசி ஏற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமனவும் கலந்து கொண்டார்.

முதற்கட்டமாக மேற்படி தடுப்பூசி 30 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட நபர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ரஷ்யாவில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ள தடுப்பூசியின் முதலாவது தொகுதி கடந்த மூன்றாம் திகதி நாட்டுக்கு கிடைத்தது. முதற்கட்டமாக பதினையாயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் அடுத்தடுத்த வாரங்களில் மேலும் தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 05/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை