ட்ரோன் கமராக்கள் மூலம் யாழ். நகர் கண்காணிப்பு

யாழ். மாநகரம் மற்றும் நகரை அண்டிய பகுதிகளை ட்ரோன் கமராக்கள் மூலம் கண்காணிக்கும் நடவடிக்கை நேற்று (26) முதற் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டது.  

விமானப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்றுக் காலை யாழ்.நகரம், நல்லுாரை அண்மித்த பகுதிகள் அடங்கலாக பல இடங்களில், தீவிர கண்காணிப்பு நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.  

குறித்த ட்ரோன் கமரா கண்காணிப்பு பிரிவுடன் உடனடியாக செயற்படக்கூடிய பொலிஸ் மோட்டார் சைக்கிள் பிரிவு இணைக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரிவு ட்ரோன் கமரா மூலம் அடையாளப்படுத்தப்படும் இடத்திற்குள் அதிரடியாக நுழைந்து பயணத்தடையை மீறுவோர் மற்றும் சுகாதார நடைமுறைகளை மீறுவோரை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. பொதுமக்கள் தேவையற்ற நடமாட்டங்களை தவிர்ப்பது நல்லது எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

கோப்பாய் குறூப் நிருபர் 

Thu, 05/27/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை