அரசாங்கத்தின் சீனி வரி குறைப்பு பொதுமக்களின் நன்மைக்கே

- 145 ரூபாவிலிருந்து 105ஆக விலை குறைப்பே நோக்கம்

சீனிக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரியைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவு மோசடியாகக் கருத முடியாதென இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அத்தோடு இவை அனைத்தும் சீனி விலை அதிகரிப்பிலிருந்து பொது மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையே என்றும் அவர் குறிப்பிட்டார்.   145ஆக இருந்த சீனியின் விலையை 105ரூபாயாக குறைப்பதே

அரசாங்கத்தின் நோக்கமென குறிப்பிட்ட செஹான் சேமசிங்க, சீனியின் விலை குறைக்கப்பட்டிருக்காவிட்டால் விலை 200ஆக உயர்ந்திருக்குமென கூறினார்.   அரசாங்கத்தின் கொள்கைகளுக்கும் அரசியல் மோசடிகளுக்கும் வித்தியாசம் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.  

சீனி வரி மோசடியினால் நாட்டுக்கு 15.6பில்லியன் ரூபாய் வரி வருமானம் இழக்கப்பட்டுள்ளதாக இறைவரி திணைக்களம் அண்மையில் பாராளுமன்றத்தில் அரச நிதி தெரிவுக்குழுவுக்கு வழங்கிய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

லோரன்ஸ் செல்வநாயகம் 

 

Tue, 03/16/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை