காரைநகர் மக்களின் காணியை சுவீகரிக்க எடுத்த முயற்சி முறியடிப்பு

காரைநகர், நீலங்காடு பகுதியில் கடற்படையின் தேவைக்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்க எடுத்த முயற்சி நேற்று வெள்ளிக்கிழமை முறியடிக்கப்பட்டுள்ளது.

காணி உரிமையாளர்கள், அரசியல்வாதிகள் இணைந்து காணியை அளக்க வந்த நில அளவை திணைக்கள அதிகாரிகளை வழிமறித்து போராட்டம் நடத்தியே காணி சுவீகரிப்பு நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இப்பகுதியில் ஜே.45 பிரிவுக்குட்பட்ட 67 பேருக்கு சொந்தமான 50 ஏக்கர் காணியை கடற்படையினரின் தேவைகளுக்காக சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி காணிகளை அளவிடும் பணிகளுக்காக நில அளவை திணைக்களத்தினர் வருகை தந்த போது அங்கு ஒன்று கூடியவர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதனையடுத்து நில அளவை திணைக்களத்தினர் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர்.

பருத்தித்துறை விசேட நிருபர்

Sat, 02/20/2021 - 11:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை