கார் மரத்தில் மோதி விபத்து; ஒருவர் மரணம், மூவர் படுகாயம்

குருநாகல் புத்தளம் பிரதான வீதியில் ரத்கரவ்வ என்ற இடத்தில் வீதியோரத்தில் நின்ற மரத்தில் கார் மோதுண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கார் சாரதிக்கு தூக்கம் காரணமாக கார் வேக கட்டுப்பாட்டை இழந்து பாதையோரத்தில் நின்ற மரத்தில் மோதியதில் காரில் பயணம் செய்த நான்கு நபர்களும் படுகாயமுற்ற நிலையில் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நான்கு நபர்கள் இரத்தினபுரியைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் குருநாகல் ஊடாக அநுராதபுரம் செல்லும் வழியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் பிரதேசவாசிகள் படுகாயமுற்ற நான்கு நபர்களையும் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குருநாகல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாவத்தகம நிருபர்

Fri, 01/29/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை