தடுப்பு மருந்து போட்ட தாதிக்கு கொரோனா

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பைசர் நிறுவனத் தடுப்பு மருந்தைப் போட்டுக்கொண்ட சுமார் ஒரு வாரத்திற்குப் பின் தாதி ஒருவருகுக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

45 வயது மத்யூ இரு உள்ளூர் மருத்துவமனைகளில் தாதியாகப் பணிபுரிகிறார். அவர் டிசம்பர் 18ஆம் திகதி பைசர் தடுப்பு மருந்தைப் போட்டுக்கொண்டார்.

எனினும் 6 நாள் கழித்து கொவிட்–19 சிகிச்சைப் பிரிவில் வேலை செய்த பின்னர் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் அவரிடம் தென்பட்டன. பரிசோதனையில் அவருக்குக் வைரஸ் தொற்று உறுதியானது.

தடுப்பு மருந்து செயல்பட சுமார் 10 முதல் 14 நாட்களாகும் எனக் கூறப்படுகிறது. மேலும், 2 முறை போட்டுக்கொண்டால் தான் தடுப்பு மருந்து 95 வீதம் திறன் வாய்ந்ததாக இருக்கும் என்பதை வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

Fri, 01/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை