சிரிய பஸ் மீது திடீர் தாக்குதல்: பலர் பலி

கிழக்கு சிரியாவில் பஸ் ஒன்றின் மீது நடத்தப்பட்ட திடீர் தாக்குதலில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பதற்றம் கொண்ட டெயிர் அல் சோர் மாகாணத்தில் கடந்த புதன்கிழமை அந்த பஸ் வண்டி தாக்கப்பட்டிருப்பதாகவும் பொதுமக்களே கொல்லப்பட்டிருப்பதாகவும் சிரிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் இந்த பஸ் வண்டியில் படையினர் இருந்ததாகவும் உயிரிழப்பு மேலும் அதிகமாக இருப்பதாகவும் கண்காணிப்புக் குழு ஒன்று உட்பட ஏனைய தரப்புகள் குறிப்பிட்டுள்ளன.

இந்தத் தாக்குதலுக்கு எந்தத் தரப்பும் உடன் பொறுப்பேற்கவில்லை.

இஸ்லாமிய அரசுக் குழுவே இந்தத் தாக்குதலை நடத்தி இருப்பதாகவும் 37 படையினர் கொல்லப்பட்டதாகவும் பிரிட்டனைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

அரச ஆதரவுப் போராளிகள் மற்றும் படையினரை ஏற்றிச்செல்லும் மூன்று பஸ் வண்டிகளை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அது தெரித்துள்ளது.

 

Fri, 01/01/2021 - 12:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை