சபாநாயகர் மஹிந்த யாப்பா அறிவுறுத்து
நாட்டில் மீண்டும் அதிகரித்துள்ள கொவிட் 19 தொற்றுநோய் சூழலுக்கு மத்தியில் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் சுகாதாரப் பாதுகாப்பு விதிகளுக்கமைய நடந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வலியுறுத்தினார். பாராளுமன்ற அமர்வுகள் நேற்று ஆரம்பத்தின்போது விடுத்த விசேட அறிவிப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதற்கமைய பாராளுமன்றத்துக்கு வரும்போதும், பாராளுமன்றத்தில் இருக்கும்போதும் சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களை கடுமையாகப் பின்பற்றுமாறும், பாராளுமன்றத்துக்கு வெளியே செயற்படும்போதும் அவற்றைப் பின்பற்றுமாறும் சபாநாயகர் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார்.
Wed, 10/07/2020 - 06:00
from tkn