சாட்சியங்கள் கிடைப்பின் ரிஷாத்தின் சகோதரர் மீண்டும் கைது செய்யப்படுவார்

ஏனையோருக்கும் அதேநிலை என்கிறார் அமைச்சர் சமல்

விடுதலை செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரருக்கு எதிரான சாட்சியங்கள் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாமென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அத்துடன் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் சம்பவத்துடன் தொடர்புபட்ட ஏனையவர்களும் எதிர்காலத்தில் கைது செய்யப்படுவரென்றும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.

அவரது விடுதலைக்கும் அரசாங்கத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என குறிப்பிட்ட அமைச்சர் விடுதலை செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதினின் சகோதரருக்கு எதிராக சாட்சியங்கள் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அவர் எந்தநேரத்தில் வேண்டுமானாலும் கைது செய்யப்படாலமெனவும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களோடு தொடர்புடைய பலர் எதிர்காலத்தில் கைது செய்யப்படலாமெனவும் தெரிவித்தார்.

அரசியல்வாதிகளை போன்று ஊடகவியலாளர் மாநாடுகளை நடத்தி தன்னிச்சையாக கருத்துக்களை தெரிவித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தொடர்பில் குற்றம் சுமத்திய அமைச்சர், அது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம் ஷம்ஸ் பாஹிம்

Wed, 10/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை