இன்று முதல் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்கு STF

இன்று முதல் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்கு STF-STF Will be Deployed to Provide Security to Prisons in Colombo

இன்று முதல் கொழும்பிலுள்ள சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக விசேட அதிரடிப்படையினரை (STF) ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெலிக்கடை, கொழும்பு விளக்கமறியல் மற்றும் மெகசின் சிறைச்சாலைகளுக்கு வெளியே பாதுகாப்புக்காக அதிரடிப்படையினரை ஈடுபடுத்தவுள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

இதன்போது சிறைக் கைதிகளின் உறவினர்களையும் அவர்களது உடமைகளையும் சோதனை செய்யவும், சிறைச்சாலைகளுக்குள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Mon, 08/24/2020 - 10:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை