கல்கிஸ்ஸை கடலில் நீராடச் சென்ற நிலையில் காணாமல் போன இருவரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்றையதினம் (23) பிற்பகல் 4.30 மணியளவில் இவ்வாறு நீராடச் சென்றவர்களில் 7 பேர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களில் ஐவர், கல்கிஸ்ஸை பொலிஸ் உயிர்காப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளால் காப்பாற்றப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் காணாமல்போன 18, 19 வயதுடைய இருவரில் 19 வயதான இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞர், பூண்டுலோயாவைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
Mon, 08/24/2020 - 11:17
from tkn