காசாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

இஸ்ரேல் எல்லையில் தீயை பரவச் செய்யும் பலூன்களை பறக்கவிடுவதற்கு பதில் நடவடிக்கையாக காசாவில் ஹமாஸ் இலக்குகள் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் மற்றும் பீரங்கிகள் கடந்த திங்கட்கிழமை இரவும் தாக்குதல் நடத்தியுள்ளது.

காசாவில் இருந்து ரொக்கெட் குண்டு வீச்சுகள் மற்றும் தீப் பந்தத்துடனான பலூன்கள் தொடர்ந்து விடப்படுவதால் கடந்த ஓகஸ்ட் 6 ஆம் திகதி தொடக்க காசா மீது இஸ்ரேல் கிட்டத்தட்ட நாளாந்தம் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

“தெற்கு காசாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்குச் சொந்தமான இராணுவ நிலைகள் மற்றும் நிலத்தடி தளங்களை போர் விமானங்கள், பீரங்கிகள் மற்றும் விமானங்கள் தாக்கின” என்று இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டது. பலஸ்தீனர்கள் விடும் தீமூட்டும் பலூன்கன்களால் தெற்கு இஸ்ரேலின் விவசாய நிலங்களில் தீச் சம்பவங்கள் பரவலாக ஏற்பட்டிருப்பதோடு இதனால் பயிர்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு பதில் நடவடிக்கையாக காசா மீதான முடக்கத்தையும் இஸ்ரேல் கடுமையாக்கியுள்ளது.

Wed, 08/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை