அரசியலமைப்பு பேரவை கரு தலைமையில் இன்று கூடுகிறது

மத்திய வங்கி நாணய சபை அதிகாரிகள் குறித்து ஆராயும்

அரசியலமைப்புப் பேரவை, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று கூடுகின்றது.

மத்திய வங்கியின் நாணயசபை வெற்றிடத்தை நிரப்ப ஜனாதிபதி பரிந்துரைத்துள்ள பெயர்கள் குறித்து ஆராயவே அரசியலமைப்புப் பேரவை கூடவுள்ளது. இலங்கை மத்திய வங்கி நாணய சபையின் இரு அதிகாரிகள் வெற்றிடத்திற்கு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டியுள்ளதால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இரு அதிகாரிகளின் பெயர்களை முன்மொழிந்துள்ளார். இது குறித்து ஆராயவே எட்டாவது பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை பிற்பகல் 06 மணிக்கு அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடுகின்றது.

இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என அரசியல் அமைப்பு பேரவையின் செயலாளர் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 06/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை