பிரதமரின் அதிரடி முடிவுக்கு இந்து மக்கள் சார்பாக நன்றி

நயினாதீவு ஆலய பாதணி விவகாரம்;

நயினாதீவு நாகபூசணியம்பாள் ஆலயத்தினுள் பாதணிகளுடன் பாதுகாப்பு பிரிவினர் பிரவேசித்தமை குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்ச எடுத்த நடவடிக்கைக்கு சர்வதேச இந்து மத பீடத்தின் செயலாளர் சிவஸ்ரீ இராமசந்திர குருக்கள் பாபுசர்மா இந்து மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் இந்து பொது அமைப்புகளால் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. இது குறித்து யாழ். பிராந்திய பிரதி பொலிஸ் மாஅதிபருடன் தொடர்பு கொண்டு இதற்கான உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார். ஜனாதிபதியாக இருந்த பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நயினாதீவு நாகபூசணியம்பாள் ஆலயத்திற்கு வருகை தந்து பக்திப் பூர்வமான பூஜை வழிபாடுகளில் கலந்துக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சகல மதங்களையும் மதிக்கும் தன்மைக் கொண்ட பிரதமரின் இந்த நடவடிக்கைக்கு இந்து மக்கள் மனபூர்வமான பாராட்டுக்களையும் நன்றிகளையும் அவருக்கு தெரிவித்துக் கொள்வதாகவும் பாபுசர்மா தெரிவித்துள்ளார்.

 

Wed, 06/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை