பொதுத் தேர்தலை நடாத்துவது குறித்து இன்று கலந்துரையாடப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் தொடர்பிலான நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இன்று இந்த விசேட கூட்டம் நடைபெறும்.
பொதுத் தேர்தலை நடாத்துவதனை சவாலுக்குட்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமலேயே நேற்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தேர்தல் ஆணைக்குழு இன்று கூட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Wed, 06/03/2020 - 07:44
from tkn