சஜித் கலந்து கொள்ளவிருந்த நிகழ்வை நிறுத்திய ஆணைக்குழு

பொல்கஸ்ஹோவிட்டவில் நேற்று சம்பவம்

பொல்கஸ்ஹோவிட்ட வேதெர வைத்தியசாலைக்கு 37 இலட்சம் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று அன்பளிப்பு செய்விருந்த நிகழ்வு தேர்தல் ஆணைக்குழுவால் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த வைத்தியசாலையில் குறைபாடாக இருந்த மருத்துவ உபரகணங்களை வழங்குவதற்காக சஜித் பிரேமதாச தலைமையில் வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வைபவத்தில் முன்னாள் சுகாதார அமைச்சர் பீ. தயாரத்ன, மேல் மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் லக்ஷ்மன் அபயகுணவர்தன, சட்டத்தரணியும் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான எரந்த வெலியங்கே, ஹோமாகமை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ரங்க அபேசிங்க, பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துக் கொள்ளவிருந்தனர். வைபவம் முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாக இருந்ததுடன் ஒரு மணி நேரத்திற்கு முன்னர் வைபவம் நடைபெறவிருந்த இடத்திற்கு சென்ற, மொறட்டுவை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரம்மிந்து டி சில்வா உட்பட பொலிஸ் அதிகாரிகள், இந்த வைபவத்தை நிறுத்துமாறு தேர்தல் ஆணையாளர் தமக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறியுள்ளனர்.

தேர்தல் ஆணைக்குழு பொலிஸாருக்கு அனுப்பிய கடிதத்தை ஏற்பாட்டாளர்கள் கேட்கும்படி வாசித்து காட்டியுள்ளனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் வாதிகள் பங்கேற்பின்றி குறித்த மருத்துவ உபகரணங்களை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Wed, 06/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை