குணமடைந்த கடற்படையினர் தொகை 250ஆக உயர்வு

- மேலும் 13 கடற்படையினர் குணமடைவு

கொவிட் -19 தொற்றினால் பீடிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் 13 கடற்படையினர் பூரண குணடைந்து வைத்தியசாலைகளிலிருந்து நேற்று (21) வெளியேறியுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இக்கடற்படையினரில் 07 பேர் கடற்படை பொது வைத்தியசாலையிலும், 04 பேர் IDH வைத்தியசாலையிலும், 02 பேர் முல்லேரியா வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றிருந்த வேளையில் அவர்களுக்கு அவ்வப்போது PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் முடிவுகளுக்கு அமைய, குறித்த வைரஸ் அவர்களது உடலில் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் நேற்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 250ஆக உயர்வடைந்துள்ளது.

இக்கடற்படையினர் அனைவரும் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ள போதும், சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

 

Fri, 05/22/2020 - 18:15


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை