107 பேருடன் சென்ற பாகிஸ்தான் விமானம் வீழ்ந்து தீப்பிடித்தது

107 பேருடன் சென்ற பாகிஸ்தான் விமானம் வீழ்ந்து தீப்பிடித்தது-Pakistan Flight Crashed On Board 107 People

107 பேருடன் பயணித்த பாகிஸ்தான் பயணிகள் விமானமொன்று திடீரென வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

 

 

பாகிஸ்தானின் லாஹூரிலிருந்து கராச்சி சென்ற, பாகிஸ்தான் விமான சேவைக்குச் சொந்தமான PK8303 எனும் குறித்த விமானம் 99 பயணிகள் மற்றும் 8 விமான சேவை ஊழியர்களுடன் பயணித்த நிலையில் இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாக, பாகிஸ்தான் விமான சேவை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

107 பேருடன் சென்ற பாகிஸ்தான் விமானம் வீழ்ந்து தீப்பிடித்தது-Pakistan Flight Crashed On Board 107 People

இன்று (22) பிற்பகல் அந்நாட்டு நேரப்படி 1.00 மணிக்கு லாஹூரிலிருந்து புறப்பட்டு பிற்பகல் 2.45 மணிக்கு கராச்சி விமான நிலையத்தை அடையவிருந்த நிலையில் கராச்சியில் வீழ்ந்து தீப்பிடித்துள்ளது.

குறித்த விமானம் குடியிருப்பு பகுதியில் வீழ்ந்து விபத்திற்குள்ளான நிலையில் குடியிருப்பாளர்களும் பலியாகியிருக்கலாம் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பிரதேசத்திலிருந்த பலர் மீட்கப்பட்டுள்ளதோடு, அந்நாட்டு படையினர் மற்றும் தீயணைப்பு பிரிவினர் பிரதேசவாசிகளுடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

 

இது தொடர்பில், குறித்த விமான சேவை நிறுவனத்துடன் இணைந்து அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

 

 

 

 

 

Fri, 05/22/2020 - 17:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை