காணித் தகராறு; கொலையில் முடிந்தது

இபலோகம, சேனபுர பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (26) மாலை காணி சம்பந்தமான தகராறு நீண்டுகொண்டு சென்றதன் காரணமாக, கூரிய ஆயுதமொன்றினால் நபரொருவர் தாக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தாக்குதலில் படுகாயமடைந்தவர் சேனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
அதேயிடத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Mon, 04/27/2020 - 11:35


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை