கொழும்பு, மெனிங் பொதுச் சந்தையை நாளை மறுதினம் முதல் மொத்த வியாபார நடவடிக்கைகளுக்காக மாத்திரம் மீண்டும் திறப்பதற்கு தீர்மானிப்பட்டுள்ளது.
இதற்கமைய ஞாயிற்றுக்கிழமை தவிர, தினமும் அதிகாலை 4.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை மெனிங் சந்தையை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மெனிங் பொதுச் சந்தைக்கான வர்த்தக சங்கத்தின் உப தலைவர் நிமல் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
மெனிங் சந்தையில் ஞாயிற்றுக்கிழமைகளில் தொற்றுநீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மெனிங் பொதுச் சந்தைக்கு வருகை தருபவர்கள், சுகாதாரப் பிரிவினரால் வழங்கப்படும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி நடக்க வேண்டும் எனவும் பொதுமக்களிடம், அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Mon, 04/27/2020 - 11:14
from tkn