கொரோனா தடுப்பு மையத்தின் தலைவராக இராணுவ தளபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் இலக்கம், 1090, ஸ்ரீ ஜயவர்தனபுர, ராஜகிரிய முகவரியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 'கொவிட் 19' வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவராக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்கள் நலனை உறுதிசெய்வதற்காகவும் பொதுச் சுகாதாரம் மற்றும் ஏனைய சேவைகளையும் ஒருங்கிணைப்புடன் கூடிய நிவாரணம் மற்றும் முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்வற்காகவும் இந்நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையத்தின் கீழ் கொண்டுவரப்படும் சேவைகளை ஒருங்கிணைப்பதற்காக சேவை அவசியத்தின் முக்கியத்துவத்திற்கேற்ப அனைத்து அதிகாரிகளும் இணைத்துக்கொள்ளப்படுவதோடு அதற்காக அவர்கள் எந்நேரமும் தயாராக இருக்க வேண்டுமென அரசு அறிவித்துள்ளது.

Wed, 03/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை