வடமாகாணத்திலுள்ள அனைத்து தனியார் கல்வி நிலையங்களுக்கும் மறுஅறிவித்தல் வரை விடுமுறையளிக்குமாறு வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ். எம்.சார்ள்ஸ் விசேட பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாவது,
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் ஏற்படக் கூடிய ஆபத்திலிருந்து எமது மாணவ சமூகத்தை பாதுகாக்கும் நோக்கில் இன்று முதல் ஏப்ரல் 20 வரை இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந் நிலையில் மாணவர்களுடைய நலனை மேலும் உறுதிபடுத்தும் பொருட்டு வடமாகாணத்திலுள்ள அனைத்து தனியார் கல்வி நிலையகளுக்கும் மறு அறிவித்தல் வரும்வரை விடுமுறையளிக்குமாறு வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ். எம்.சார்ள்ஸ் விசேட பணிப்புரை விடுத்துள்ளார்.
from tkn