மு.காவும் மக்கள் காங்கிரஸும் புத்தளத்தில் இணைந்து போட்டி

புத்தளம் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து, பொதுச்சின்னத்தில் போட்டியிடுவதென முடிவு செய்துள்ளன. கொழும்பில் நேற்று முன்தினமிரவு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான குழுவுக்கும், முஸ்லிம் காங்கிரஸ்  தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவுக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புத்தளத்தில் நீண்டகாலமாக பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாத குறை தொடர்பில், அங்குள்ள பள்ளிவாசல் சம்மேளனம், பொதுநல அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இந்த விடயம் தொடர்பில், பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தியிருந்தன. அது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடனும் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

கொழும்பில், நேற்று முன்தினமிரவு இவ்விரு கட்சிகளின் தலைவர்களுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை களையடுத்து, பொதுச்சின்னத்தில் போட்டியிடுவதென்ற முடிவு எடுக்கப்பட்டதுடன், வேட்பாளர்கள் ஒதுக்கீடு தொடர்பில், இருதரப்பும் கலந்துபேசி முடிவெடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

 

Fri, 03/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை