அம்பாறை மாவட்ட ரக்பி சுற்றுப் போட்டி அட்டாளைச்சேனை பிரதேச அணி சம்பியன்

அம்பாறை மாவட்ட விளையாட்டு விழாவையொட்டி நடாத்தப்பட்ட, பிரதேச செயலகங்களுக்கிடையிலான ரக்பி சுற்றுப் போட்டியில் அட்டாளைச்சேனை பிரதேசஅணி வெற்றியீட்டி சம்பியனாகியது.

சாய்ந்தமருது பிரதேச அணியினர் இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டதாக அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அமீரலி தெரிவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான ரக்பி சுற்றுப் போட்டியில்அட்டாளைச்சேனை, சாய்ந்தமருது, அம்பாறை பிரதேச செயலக ரக்பி அணிகள் பங்குபற்றின. அட்டாளைச்சேனை மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலக அணிகளுக்கிடையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 24:0 என்ற அடிப்படையில் அட்டாளைச்சேனை பிரதேச செலக அணியினர் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டனர். அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அமீரலியின் வழிகாட்டலில் நடைபெற்ற ரக்பி போட்டியின் போது, அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம்.அஸ்வத், சாய்ந்தமருது பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் பி.வசந் ஆகியோரும் பிரசன்னமாயிருந்தனர்.

(அட்டாளைச்சேனை மத்திய நிருபர்)

Sat, 03/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை