ஆழ்கடலில் ஹெரோயின் மீட்பு; 28 பேரையும் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

கடலில் வைத்து 400கிலோ ஹெரோயின் மற்றும் 100கிலோ ஐஸ் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ள வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 28சந்தேக நபர்களையும் ஐந்து நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரட்ண நேற்று பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்துக்கு அனுமதி வழங்கினார். 

கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி 6,000மில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது. 

கடலில் வைத்து பெருந்தொகை போதைப்பொருட்கள் மீட்கப்பட்டிருப்பது இதுவே முதற்தடவையென பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்துக்கு அறிவித்தனர்.  

மேலும் இலங்கை கடல் எல்லையிலிருந்து 600கடல் மைல் (1111கிலோமீற்றர்) தொலைவில் சுமார் 6பில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயினும் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் நீதவானிடம் சுட்டிக்காட்டினர். 

அதனை தொடர்ந்து மார்ச் 11 ஆம் திகதியன்று சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார். 

Sat, 03/07/2020 - 09:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை