மட்டு.வேலையற்ற பட்டதாரிகள் காந்தி பூங்காவில் ஆர்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு காந்திப்பூங்காவில் ​நேற்று (05) ஒன்றுகூடி விரைவாக தமக்கான நியமனத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் இது தொடர்பான விழிப்புனர்வு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

வேலையற்ற பட்டதாரிகள் பாகுபாடின்றி அனைவருக்கும் விரைவாக நியமனத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நம்பியுள்ளோம், பாகுபாடின்றி அனைவருக்கும் நியமனம் வழங்க வேண்டும், பட்டதாரி நியமனத்துக்கு இன்னும் ஏன் தாமதிக்க வேண்டும் என்பன போன்ற கோசங்களையும் வேலையற்ற பட்டதாரிகள் இதன் போது முன் வைத்தனர்.

ஜனவரி மாதத்துக்குள் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனத்தை விரைவாக வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். மஹிந்த ராஜபக்க்ஷ ஜனாதிபதியாக இருந்த கால கட்டத்திலேயே அதிகமான பட்டதாரிகளுக்கு ஒரே தடவையில் தொழில் கிடைத்தது. இன்று அதே அரசாங்கம் இருக்கின்றது. எனவே எங்களுடைய நிலையை கருத்திற் கொண்டு வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனத்தை வழங்க முன் வரவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கே.அனிரன் தெரிவித்தார்.

(புதிய காத்தான்குடி தினகரன் கல்லடி குறூப் நிருபர்கள்)

Mon, 01/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை