சிங்கள மக்களின் வாக்குகளே தமிழ் மக்களை பாதுகாத்தது

ஜனாதிபதி தேர்தலில் சிங்கள மக்களின் வாக்குளால் தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட்டு இருக்கின்றார்கள். சஜித் வெற்றி பெற்று இருந்தால் இன்று தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறியாயிருக்கும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

திருக்கோவில் பிதேசதத்தில் முன்னாள் போராளிகளின் அழைப்பின் பேரில் திருக்கோவில் கலாசார மத்திய நிலையத்தில் நேற்றுமுன்தினம் (04) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி கருத்தினை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் தேசியம் பேசிக் கொண்டு இருக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தினை தமிழர்களுக்கு வழங்க கூடாது என்று தடுத்துக் கொண்டு இருக்கின்ற ஹரிஸ் எம் பியுடன் கல்முனையில் இடம்பெற்ற சஜித்தின் தேர்தல் மேடையில் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் ஒன்றாக அமர்ந்து இருக்கின்றார்கள்.

இப்படி இருந்து கொண்டு எப்படி கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தி தரும்படி கேட்பது. இப்போது அவர் போராட்டம் நடத்தப் போவதாக கூறி வருகின்றார் .இது எல்லாம் போலி வேலைகள் இவ்வாறு தான் தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றனர். எனவே தமிழ் மக்களுக்கு ஒரு மாற்றம் தேவை இதனை நிறைவேற்றுவதே எமது இலக்கு என அவர் மேலும் தெரிவித்தார்.

திருக்கோவில் தினகரன் நிருபர்-

Mon, 01/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை