பேருவளை பள்ளிவாசலுக்கு பல்கலை மாணவர்கள் கள விஜயம்

முஸ்லிம்களின் சமய கலாசார விடயங்கள் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் நேற்று பேருவளை சீனன்கோட்டை பாஸிய்யா ஜும்ஆப்பள்ளிவாசலுக்கு கள விஜயமொன்றை மேற்கொண்டனர்.

 பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சகிதம் வருகை தந்த மாணவர்களையும் ஊர் பிரமுகர்கள் வரவேற்றனர். இந்நிகழ்வில் பள்ளிவாசலின் உலமாக்கள், பள்ளிச்சங்க நிர்வாகிகளினால் மாணவர்களுக்கு விளக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும் பேருவளை மங்கள பிரிவெனாவின் விகாராதிபதியும் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.

பட உதவி: ஹிதாம் அலி

Mon, 01/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை