தொழில் சார் தீயணைப்பு சங்கத்தினர் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமத்தினருடன் இணைந்து ஏற்படு செய்திருந்த அணிக்கு ஆறு பேர் கொண்ட நாடளாவிய தீயணைப்பு மென் பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி அண்மையில் ஹம்பாந்தோட்டை மாநகர சபை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் வடக்கு,கிழக்கு மாகாணங்கள் உட்பட நாடு பூராவுமிருந்தும் 14 தீயணைப்பு விளையாட்டுகழகங்கள் பங்குபற்றின.
இதில் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழு மத்தினை பிரதிநித்துவப் படுத்தி போட்டியில் கலந்துகொண்ட அவசர பாதுகாப்பு தீயணைப்புக்குழுவினர் இரண்டாவது தடவையாகவும் வெற்றிக் கிண்ணத்தினை சுவீகரித்துக் கொண்டனர்.
இப் போட்டியில் தொழிலசார் தீயணைப்பு சங்கத்தின் அங்கத்தவர்களுக்கு பங்குபற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.
ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்
from tkn